Thursday, September 6, 2012

ஏப்பா தம்பி , நான் சரியா பேசறனா ? 1


அவள் ஏன் அன்று அப்படி ஒரு பார்வை பார்த்தாள்,

அவங்க ஏன் அப்படி சொன்னாங்க ?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?

ஏன் நான் அப்போவெல்லாம் அப்படி இருந்தேன் ?

இப்ப ஏன் இப்படி நடந்துகிறேன் ? 

அவன் என்னை இன்னும் அப்படி தான் நினைச்சிகிட்டு இருப்பானோ ?

அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் ?

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?

இவங்களுக்கு அந்த விசியம் தெரியுமா ,தெரியாதா ?

இப்படி பதில் தெரியாத எத்தனையோ கேள்விகளை விட்டு செல்கிறது இந்த வாழ்க்கை ....!

பெரும்பாலும் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடுகிறது .ஆனால் கொஞ்சம் தாமதமாக .....சில கேள்விகளுக்கு ரொம்பவும் தாமதமாக ..........

நான் வேண்டுவதெல்லாம் ஒன்று தான் ...

எனக்கு பதில் தெரிய வரும் போது அல்லது பதில் புரியும்போது ,கேள்வியை நான் மறக்காமல் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment