Thursday, September 6, 2012

அழகியலானவள்

ஆணுக்கு அழகு
இயல்பும் தீர்க்கமும் .......

பெண்ணுக்கு அழகு 
நேர்த்தியும் கண்ணியமும் .....

அவள் பெண்களில் அழகானவள் ....!!!

Declare a writ ?

The above question is wandering my mind for ages .I wondered when I , first time , saw the prayer in medical student batch cases .In that case they seeking for the prayer that "Writ of Declaration ". 

Obviously , our constitution did not contained the writ of declaration .  Whether  we able to seek for the writ which is not provided any where in constitution ? Whether advocate can create the writ ? whether we may able to declare the Writ of Declaration as Writ ?     Needless to say relief of declaration is available in Specific Relief Act .

Indeed , we may get the such kind of relief  by way of   ''Writ of Certiorari  ''.   

On the other hand  Art.226 provide the relief  in the sense 'or any of them '. By the language of Art 226 ,we may come to the conclusion that High Court may provide the any other relief  apart from five Writs .  It is noteworthy that Art 32 did not contain such option .But , flagrantly ,it is discretionary of the court . At length , court can provide the relief apart from Five Writs. But we cannot sought for . 

I goggled that when it is emerged , how is it become possible ? Despite i am not able to conclude . O...... my....legal luminaries ! help me ....! 

ஏப்பா தம்பி , நான் சரியா பேசறனா ? 1


அவள் ஏன் அன்று அப்படி ஒரு பார்வை பார்த்தாள்,

அவங்க ஏன் அப்படி சொன்னாங்க ?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?

ஏன் நான் அப்போவெல்லாம் அப்படி இருந்தேன் ?

இப்ப ஏன் இப்படி நடந்துகிறேன் ? 

அவன் என்னை இன்னும் அப்படி தான் நினைச்சிகிட்டு இருப்பானோ ?

அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் ?

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?

இவங்களுக்கு அந்த விசியம் தெரியுமா ,தெரியாதா ?

இப்படி பதில் தெரியாத எத்தனையோ கேள்விகளை விட்டு செல்கிறது இந்த வாழ்க்கை ....!

பெரும்பாலும் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடுகிறது .ஆனால் கொஞ்சம் தாமதமாக .....சில கேள்விகளுக்கு ரொம்பவும் தாமதமாக ..........

நான் வேண்டுவதெல்லாம் ஒன்று தான் ...

எனக்கு பதில் தெரிய வரும் போது அல்லது பதில் புரியும்போது ,கேள்வியை நான் மறக்காமல் இருக்க வேண்டும்.

Wednesday, September 5, 2012

ஹைதராபாத் – சிறு பயண கட்டுரை

              
தோழியின் திருமணத்திற்காக ஹைதராபாத் சென்று வந்தேன். நான் ஹைதராபாத் செல்வது இதுவே முதல் முறை .இந்திய பெரு நகரங்களில் டெல்லியும் ,பெங்களுருவுமே அதிக பரிச்சயம் . இந்த இரு நகரங்களிலும் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை . டெல்லி என்றால், விமான நிலையத்தில் இருந்து ஒரு pre paid call taxi  பிடித்து  ‘கரோல் பாக்’ சென்று விழுந்து விடுவேன். அது ஒரு குட்டி தமிழ் நாடு . அதே போல பெங்களூரு என்றால் சொல்லவே தேவை இல்லை .எங்கும் தமிழ் கேட்கலாம் அல்லது அங்குள்ள கன்னடகாரர்களுக்கும் ஓரளவு தமிழ் தெரியும். எனக்கு எப்போதும் தமிழ் காதில் விழுந்து கொண்டேயிருக்க வேண்டும் அப்போதுதான் சந்தோசம் .

பொதுவாக ரயில் பயணங்கள் என்றால் எனக்கு ஒரு HESITATION . சின்ன வயதிலிருந்து அப்படித்தான் .எங்கும் அதிகம் ரயில் பயணங்கள் செய்ததில்லை .அனால் ரயில் பயணங்கள் சுவாரஸ்யமானவை என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் .அனால் பழகத்தான் இல்லை .இம்முறை ஹைதராபாத் துக்கு ரயிலில் செல்வதாகத்தான் இருந்தது .அப்புறம் அந்த திட்டம் ரத்தாகி நான் விமானத்தில் செல்ல நேரிட்டதில் எனக்கு சந்தோசம் தான் .பொதுவாக பலருக்கு விமானப் பயணம் என்றால் இரவு நேரம் தான் பிடிக்கும் . என் தங்கைக்கு கூட அப்படித்தான் .நகரங்களின் விளக்குகளின் ஒளிகளை காண்பது சந்தோசம் என்பாள். ஆனால் எனக்கு எப்போதுமே பகல் நேர விமானப் பயணம் தான். மேகங்களின் வடிவங்களை ரசித்துக் கொண்டே பயணிப்பது ஒரு தனி சுகம் .அதே போல நாம் பார்த்து பழகிய சென்னையே கழுகுப் பார்வையில் வித்தியாசமாக தெரியும் .அதுவும் கடல் பகுதியை கடக்கும் போது .............சரி ,சரி பகல் நேர விமானப் பயணங்களின் சுவாரசியம் பற்றி நான் பேச ஆரம்பித்தால் ஒரு தனி கட்டுரை வேண்டும் . இப்போ ஹைதராபாத்துக்கு வருவோம் .

அனேகமாக இந்தியாவில் எல்லா நகரங்களிலும் விமான நிலையங்களும் ஒரே மாதிரியாக கட்டப்பட்டு வருகிறது .நம் சென்னையில் கூட இந்தப் பணிகள் நடை பெறுகின்றன. அழகாகத்தான் இருக்கிறது என்றாலும் இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எனக்கு சில உறுத்தல்கள் இருக்கின்றன .விமான நிலையங்களின் அருகே மேம்பாலங்களே இருக்க கூடாது என விதி இருக்கும் போது , இந்த புது விமான நிலையங்களில் entresol  வரை மேம்பாலம் அமைத்திருப்பது பாதுகாப்பானது தானா ?


ஹைதராபாத் ஒரு குறிஞ்சி நிலம் . அதாவது மலையும் மலையை சார்ந்த பகுதியும் .ஊர் முழுக்க மலைகளும் குன்றுகளுமாகவே இருக்கிறது . எல்லா நகரங்களுமே  AIR PORT லும் ,SOFTWARE COMPANY கள் அமைந்துள்ள SPECIAL ECONOMIC ZONE களிலும் அழகாக மிடுக்காக வித்தியாசப் படுகின்றன . ஊருக்குள் வந்து விட்டால் ,எல்லா ஊரும் ஒன்று தான். ஆட்டோக்கள் மட்டும் ஊருக்கு ஊர் வித்தியாசப் படுகின்றன . ஹைதராபாத் சென்னையை விட பெரிய நகரம் .டிராபிக் ம் ரொம்பவே அதிகம் . நம்ம சென்னையை போலவே அங்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன .மெட்ரோ வந்தால் டிராபிக் நன்றாக குறையும் .ஊர் பிஸியாக இருக்கிறது . ஆங்காங்கே பிள்ளையார், சதுர்த்திக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் .

 தெலுங்குவுடன், இந்தியும் அதிகம் பேசுகிறார்கள் .எங்கு சென்றாலும் தெலுங்கா? hindi யா ? என்று கேட்கிறார்கள் . ஆனாலும் இந்தி ரொம்பவும் பூந்து விளையாடுகிறது .  நம்ம ஊரில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது எவ்வளவு நல்லது என்று அப்போதுதான் புரிந்தது . எப்படா தாய் மொழியை மறக்கலாம் என்று இருக்கிற நம்மவர்கள் , இந்தி உள்ளே வந்திருந்தால் எப்போதோ மறந்திருப்பார்கள் .
ம்ம்ம் ... அப்புறம் ....ஆந்திரப் பெண்கள் மிக அழகாக இருக்கிறார்கள் .
‘’சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம் ‘’என தலைவர் பாரதி ஏன் FEEL பண்ணி பாடினார் என அப்போதுதான் தெரிந்தது .

‘’கல்யாண மண்டபம் ஏர்போர்ட் லிருந்து ரொம்ப பக்கம் அஸ்வா’’ என்று ஏற்கனேவே சொல்லி இருந்தாள் மணப்பெண் . வந்து சேரத்தான் ஒன்றரை மணி நேரம் ஆனது ! மண்டபத்திற்குள் நுழைந்த பின்தான்  தமிழ் கேக்க முடிந்தது. மண்டபத்திற்குள் வந்த பிறகு ஒரு COMFORT ZONE க்குள் உள்ளது போன்று ஒரு உணர்வு .நான் ஏற்கனவே சொன்னது போல் , எனக்கு எப்போதும் தமிழ் காதில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் . மாலை நேரத்தில்தான்  கல்யாணம் ! அங்கு உள்ள ஒருவரிடம் இது பற்றி கேட்டேன் .வழக்கமா ஆந்திராவில்  MID NIGHT-ல தான் கல்யாணம் பண்ணுவாங்க, இவங்கதான் மாலை நேரத்தில் பண்றாங்க என்கிறார் .அடப்பாவிகளா!?
ஆனால் எது மாறினாலும் நாதஸ்வர ட்யூன் மட்டும் மாறவில்லை .அந்த கல்யாணத்தில் எனக்கு பிடித்த விசியம் அங்கே எல்லோரும் queue ல் நின்று மணமக்கள் தலையில் அட்சதை தூவி வாழ்த்துகிறார்கள் .நம்ம ஊரில் தாலி கட்டும் போது எல்லோரும் ஒரே நேரத்தில் அட்சதை தூவுவோம் . .திருமணத்திற்கு வந்த அனைவர் தலையிலும் அட்சதை இருக்கும் .அதுவும் மணப்பெண் தோழிகளில் அழகானவர் மீது அதிக அட்சதை இருக்கும் !!!  
ஆந்திர பெண்கள் மிக அழகானவர்கள் என்ற எனது கருத்துக்கு கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்களும் வலு சேர்த்தார்கள்.

மறு நாள் நண்பர்கள் எல்லாம் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினோம் . நான் பெருசாக ஒண்ணும் பிளான் பண்ணவில்லை .கல்யாணத்திற்கு போய்விட்டு நைட் நல்லா தூங்கிட்டு  மறுநாள் கிளம்பி வந்துடலாம் என்று தான் போனேன் . இரண்டு இடங்களுக்கு மட்டும் போனேன் . முதலில் போனது ....



பிர்லா மந்திர். இந்தியாவில் பல இடங்களில் பிர்லா குழுமத்தால் கட்டப் பட்டுள்ள கோவில்கள் ‘’பிர்லா மந்திர் ..‘’மந்திர் என்றால் கோவில் என்று பொருளாம் .ஒரு குண்றின் மேல் கம்பீரமாக அமைந்துள்ளது, வெள்ளைப் பளிங்குளால் ஆன அந்த அழகிய கோவில். உள்ளே செல்லும்போதே CAMERA, CELL PHONE எல்லாவற்றையும் பிடிங்கி கொண்டார்கள்.பண்டைய கால சிற்பங்களில் உள்ள நுணுக்கங்களை அந்த கோவிலில் காண முடிந்தது. .எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் எழுபதுகளில் கட்டப்பட்ட ஒரு கோவிலில் எப்படி இது சாத்தியமானது ? கட்டி முடிக்க பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது  . ஆரம்பத்திலேயே விநாயகரும் சிவா பெருமானும் அருள் பாலித்துக் கொண்டிருந்தார்கள் .கிருஸ்துவ மதத்தின் கருத்துக்களும் ,ஜைன மதம் பற்றிய குறிப்புகளும் கூட இருந்தன .அதனால் உள்ளே மூலவர் யார் என்பது கடைசி வரை சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது . உள்ளே பார்த்தால் பெருமாள் ! நான் தீவிர சிவ பக்தன் என்பதால் நான் பெருமாளை கும்பிடுவதில்லை. ஆனால் நல்ல ரம்ம்ம்ம்ம்மியமான ஒரு சூழல். கோவிலில் எங்குமே மணி இல்லை .தியானம் செய்ய எதுவாக இப்படி அமைத்திருக்கிறார்கள் .














அங்கிருந்து பார்த்தால் உசைன் சாகர் ஏரியும் புத்தர் சிலையும் நன்றாக தெரிந்தது .அடுத்ததாக அங்குதான் செல்ல வேண்டும் என தீர்மானித்தோம் .
எனக்கு எப்பவுமே தண்ணி. போட்டிங் என்றால் பிடிக்கும் .அந்த வகையில் உசைன் சாகர் ஏரியும் மிகவும் பிடித்தது .அற்புதம் ! அழகு !  ஏரியின் நடுவே ஸ்டைல் ஆக நின்று கொண்டிருக்கிறார் புத்தர் . அந்த புத்தர் சிலைக்கு கரையில் இருந்து படகுகள் சென்று வந்து கொண்டிருந்தன . நாங்களும் படகில் ஏறி அமர்ந்தோம் . எங்களுடன் ஒரு பெண்கள் குழு தெலுங்கு பேசிய படி வந்தார்கள் .  

              ‘’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
              தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம்’’
தலைவர் பாட்டு,  படகில் போகும் இந்த சூழ்நிலைக்கு நன்கு பொருந்தியது .

ஒரு பெரிய நகரத்தின் நடுவே ஒரு ஏரியை இந்த அளவிற்கு சுத்தமாக பாதுகாப்பது என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் அங்கு ஓரளவு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகவே உணர்கிறேன் . எங்கள் தோழியின் வீட்டு முன்பு கூட ஒரு சின்ன சைஸ் குளம் இருக்கிறது !!!! நம்ம ஊரில் சாத்தியமா ? சிறு நகரங்களில் கூட நீர்நிலைகளை நாம் விட்டு வைப்பது இல்லை .


                             வேளச்சேரி ஏரி
உசைன் சாகர் ஏரியை பார்த்த போது எனக்கு ஞாபகம் வந்தது நம் ‘’வேளச்சேரி ஏரி’’! நம்மவர்கள் பலருக்கு அங்கு ஏரி இருந்ததே தெரியாது . 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இருந்த ஏரியைத் தான் நாம் குப்பை கொட்டியே அழித்து விட்டோம் . இத்தனைக்கும் ஹுசைன் சாகர் எல்லாம் செயற்கை  ஏரி தான் .பதினாறாம் நூற்றாண்டில் தான் கட்டப் பட்டிருக்கிறது .அந்த புத்தர் சிலை 1992 ல்  தான் நிறுவப்பட்டிருக்கிறது .  நம் வேளச்சேரி ஏரி ஒரு இயற்கை ஏரி .இத்தனைக்கும் சதுப்பு நில ஏரி .அதாவது நம்ம பிச்சாவரம் மாதிரி .சதுப்பு நிலம் என்பது பல்லுயிரிகள் வாழும் தொகுப்பு . ஆராய்ச்சியாளர்களின்  அல்வா துண்டு ! அப்படிப்பட்ட ஒரு ஏரியை இன்று இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டோம் .இயற்கையின் நீர் வழிப்பாதைகளை மறித்து வீட்டை கட்டி விட்டு மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் வருகிறது ,பாம்பு வருகிறது என்றெல்லாம் டிவியில் பேட்டி கொடுப்பதால் புண்ணியம் இல்லை .

Saturday, July 14, 2012

medico legal law


The pathetic case of ganesan reiterate the importance of buttressing the position, legal and judicial activism on medico legal laws.










Let's see, the factual aspects of the pathetic case,  Ganesan, a coolie worker, admitted his wife namely rukamani for family planning operation in government medical college hospital, nagarcoil. Unfortunately, operation was conducted unsuccessfully and she becomes unconscious. There is also an allegation that the medical officials used nitro oxide instead of oxygen in negligent manner .Further, rukmani adimitted on "ICU''.


In the circumstances, ganesan filed the writ petition seeking for certain relief against the hospital. The high court directed for Rs. 50,000/- as interim compensation .Subsequently rukamani was shifted to other hospital for further treatment.


Finally, while she was under the treatment in Christian medical college hospital, Vellore, she died on 4.5.12.


Then, ganesan filed another writ petition to seeking direction for restrain the government medical college hospital, nagarcoil to conduct the post mortem, and consequential direction for conduct post mortem in christian medical college. 


It is not able to say as wrong, the person having panic that if the same medical officials, who are the reason for the death caused by negligence (or who kill the rukmani - according to her husband) conduct the post mortem, there is lot of possibilities to suppress the facts and giving wrong report.


Now, the Hon'ble High Court (in W.P.(MD)No.6750 of 2012)  , restrained the nagarcoil medical college officials to conduct the post mortem ,and directed the vellore medical college to conduct post mortem . The petitioner also was allowed to take the video graph of the post mortem. 


Here, things to be reckon, ganesan being coolie worker, admit his wife in hospital not for any medical illness but for family planning operation which is motivated by the government. Lethargic and negligence approach ensued in end of life of a poor woman. Now she passed away leaving her two children without any fault on her. 

Tuesday, May 15, 2012

கடற்கரை



 நேற்று இரவு , வழக்கு எண் 18/09   படத்திற்கு செல்லலாம் என சென்றேன் .டிக்கெட் கிடைக்கததால் நேரடியாக வீடு செல்ல மனமில்லாமல் வாகனத்தை கடற்கரைக்கு ஓட்டினேன் . மிக நீண்ட நேரம் கடற்கரையில் செலவிட்டேன் . என்   மூட் தெரிந்து FM  மிலும் நல்ல அழகான பாடல்கள் ஒளிபரப்ப பட்டது . எத்தனை எத்தனை மனிதர்கள் . நைட் பத்தரை  ஆனாலும்  வீடு திரும்ப மனமில்லாமல் ஒரு குடும்பம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது . அந்த குழந்தை தேவ பாஷையில் எதோ எதோ பேசிக்கொண்டு 
 விளையாடிக் கொண்டிருந்தது . 

கொஞ்ச தூரம் தள்ளி நான்கைந்து இளைஞர்கள் சோம பானமும்,சுறா பானமும் அருந்தி கொண்டிருந்தார்கள் .எப்போதும் போல தான்,.... நான்கு பேர் உட்கார்ந்து தண்ணியடித்தால் ஒருவன் தன் தோற்று போன காதலை பற்றியும் , ஒருவன் இன்னும் தோற்று போகாத காதலை பற்றியும் பேசுகிறான் . ஒருவன் பொண்ணுங்க னாலே கடுப்பாருக்கு என்கிறான் .  


அந்த நேரத்திலும் ஒருவனும் ,ஒருத்தியும் கடலை வறுத்துக் கொண்டிருக்கிறார்கள் . அந்த ஒருத்தியின் வீட்டில் தேட மாட்டர்களா , தெரியவில்லை . 
சிகையை வைத்து மட்டுமே யுவனா?, யுவதியா? என்று அடையாளம் காண முடிகிற அளவிற்கு ஒரு கூட்டம் , சாதாரண மாருதி அல்டோ தான் , அதை வைத்து கொண்டு, சத்தமாக பாட்டு போட்டு கொண்டும் சீன் போட்டுக் கொண்டும் இருந்தது .சந்தோசமாக இருப்பது தப்பு என சொல்ல வில்லை. இந்த மாதிரி கூட்டங்கள் , மற்றவர்களுக்கு தொந்தரவாகவும் , தங்களை மட்டும் சமுகத்திலிருந்து  வேறாகவும் காட்டி கொள்கின்றன . தெரிந்தாலும் தமிழ் பேசுவதில்லை . அதற்காக ஆங்கிலத்தில் பெரிய மேதைகளும் இல்லை . இதுங்களுக்கு ஷேக்ஸ் பியரோ , கீட்ஸ் யோ தெரியாது . தெரிந்த தெல்லாம் பிரிட்னி பியர்சும் , டாம் க்ருஸ் ம் தான் . 

இது எதை பற்றியும் அலட்டி கொள்ளமால் பக்கத்து குப்பத்து இளைஞர்கள் பாயுடன் உறங்குவதற்கு சென்று கொண்டிருந்தார்கள் . 

நான் வீடு திரும்பும் பொது மணி 12!   இந்த கடற்கரைக்கு வந்துதான் எத்தனை நாட்கள் ஆகின்றன ? , அதீத வேலை பளுவால் இப்போதெல்லாம் முன்பு போல் கடற்கரைக்கு செல்வதில்லை . கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு வானத்தையும் கடலையும் பார்க்கும் போது தான் தோன்றுகிறது இந்த உலகம் எவ்வளவு பெரிய தென்று . கடற்கரையிடம் தன் கவலைகளையும் ,காதலையும் பகிர்ந்து கொள்ளாத மனிதரும் யாராவது இருப்பாரா என்ன ? , இந்த கடற்கரை எத்தனை பேருக்கு ஆறுதலாக , சந்தோசமாக ,பிழைப்பு தரும் இடமாக , ம்ம்ம் ... சிலருக்கு தவறு செய்யும் இடமாக கூட விளங்குகிறது( தவறு என்று சொல்லும்போது ஒருநாள் எனக்கு பக்கத்தில் அமர்ந்த பயணி சொன்ன கவிதை நினைவுக்கு வருகிறது .
''கண்ணகியின் சிலைக்கு பின்னால்...
கற்பு விலை பேச படுகிறது'' )
 எத்தனை உணர்வுகள் கொட்டி கிடக்கின்றன இங்கே ? 

முதல் முதலாக ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இந்த கடலை ,  மெரினா வில்  முதல் முதலில் சந்தித்தேன் .அப்போதெல்லாம் சென்னை என்றால் VGP ,மெரினா, மகாபலிபுரம் ,முதலைப் பண்ணை  அவ்வளவுதான் . திரும்ப செல்லும் அலைகள்  காலடியிலிருந்து மணலை இழுத்து செல்லும் போது என்னை இழுத்து சென்றது போல் இருந்தது கண்டு சிலிர்த்தேன் . ஆனால் அப்போதே எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் கடலில் விழுந்து ஆசை தீர குளிக்க ஆசைப்பட்டேன் .என் ஆசையை வெளிப்படுத்திய போது அனுமதிக்கு பதில் அப்பாவிடம் இருந்து அடி தான் கிடைத்தது .

பின் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ,பள்ளி சுற்றுலா , மகாபலி புரம் சென்றோம் .அப்போது எனக்கு பஸ்சில் பக்கத்து சீட்டில் சிவரஞ்சனியை உட்கார வைத்து விட்டார்கள் என்று எனக்கு கோபமும் ,அழுகையுமாக (!) வந்ததது .   'இந்த வயசில் உனக்கு என்னடா பொண்ணு பக்கத்தில் உட்கார கூச்சம் '  என்று சரோஜா  டீச்சர் விட்ட அறையில் UPSET ஆனதால் அன்று சரியாக கடலிடம் பேசவோ பழகவோ இல்லை .

அதன் பிறகு ,ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்த கடலை ( எல்லாம் ஒரே கடல் தானே , இன்னும் கேட்க போனால் உலகம் முழுவதும் ஒரே கடல்தான் ,  நாம் தான் வேறுவேறாக பேர் வைத்துள்ளோம் ) வேளங்கன்னியில் பள்ளி சுற்றுலா சென்ற போது மீண்டும் சந்தித்தேன் . அன்று தான் எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது . எல்லோரும் மாதா கோவிலில் வழி பாட்டில் இருந்த போது நங்கள் மட்டும் தப்பித்து கடலுக்கு வந்து விட்டோம் ..கடலில் விழுந்து ஆசை தீர குளித்தோம் .என் கூட குளித்தவர்கள் எல்லாம் 10TH STD  ( அதில் என் அண்ணனும் ஒருவன் ) நான் மட்டும் தான் சின்ன பையன் ,  6TH STD ,கொஞ்ச தூரத்தில் கண்ணுக்கு தெரிந்த ஒரு படகை பிடிக்க எனக்கும், எங்க அண்ணனுக்கும் போட்டி .நீண்ட நேரம் முயற்சி செய்தும் அந்த படகை நெருங்க முடியாமல் திரும்பி பார்த்தால் ,உடன் குளித்த ஒரு பயலையும் காணோம் . கரையோரம் சரோஜினி டீச்சர் கடலில் குளித்துக்கொண்டிருந்த எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார் . என்னால் மட்டும் தப்பித்து செல்ல முடியாது போனது .ஏன் என்றால் எனது சட்டையும் ,பேண்டும் சரோஜினி டீச்சரின் காலுக்கு கீழே இருந்தது .வேறு வழியில்லாமல் அவர்களுக்கு பக்கத்தில் போய், ' கொஞ்சம் தள்ளி நில்லுங்க மிஸ் , என் டிரஸ் ய் எடுத்துக்கிறேன்'  ,என்றேன் .  எனது கன்னத்தில் மாறி , மாறி அறைந்தார் சரோஜினி மிஸ் . வேறு வழியே இல்லாமல் ஓடிப் போகவும் முடியாமல் அவங்க TIRED  ஆகறவரைக்கும் அடி வாங்கிட்டு அப்புறமா டிரஸ் எடுத்திக்கிட்டு வந்தேன் .


சட்ட கல்லூரி வந்த வுடன் முதலில் நான் தங்கி இருந்தது திருவல்லிகேணியில் , மாலை கல்லூரி முடிந்தவுடன் கொஞ்ச நேரம் மெரினா வில் உட்கார்ந்து கொண்டிருப்பேன் . அப்போதெல்லாம் சென்னையில் எனக்கு இருந்த ஒரே நண்பன் இந்த கடற்கரை தான் . எனது கல்லூரி , எனது DREAM GIRL  ,தனிமை ,ஏமாற்றம் என நான் பேசும் எல்லாத்தையும் கேட்டு விட்டு ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பான் இந்த கடல் நண்பன் . ஒரு நாள் , ரொம்ப அருகில் உட்கர்ந்து இருந்த போது அலை வந்து ஏன் நோட்டை அடித்து  சென்று விட்டது . அப்புறம் எப்படியோ தடுமாறி எடுத்தேன் .அதெல்லாம் ஒரு காலம் .அப்போதிருந்த அப்பாவி அசுவத்தாமனை இப்போது தேடினாலும் கிடைக்காது .


சுனாமி வந்த போது அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் ஒழுங்காய் மக்களிடம் போய் சேர்ந்ததா என்று ஆராய நாங்கள் ஒரு குழுவாக சட்ட கல்லூரியில் இருந்து கிளம்பி சென்றோம் .நான் கடலோடு மிக நெருக்கமாக பழகியது அந்த நாட்களில் தான் . சென்னையிலிருந்து பாண்டி எல்லை வரை அனைத்து கிராமங்களுக்கும் சென்றோம் .சிறுவயதிலிருந்து எனக்கு மீன் பிடிக்காது .அந்த கேம்ப் க்கு பிறகு தான் மீன் சாப்பிட ஆரம்பித்தேன் .மீனவர்களுடன் FYBER   போட்டில் நடுக்கடலுக்கு சென்றோம் அங்கு கடலில் விழுந்து குளித்ததெல்லாம் மறக்க முடியாத அனுபவம் . கடலில் நீந்து வது  ரொம்ப கடினமாக இருந்தது . உப்பு நீர் என்பதால் அதிக கடினமாக இருக்கிறது .மீனவர்கள் வாழ்க்கை ஒன்றும் சாதாரண மானதில்லை . ஒரு நீண்ட கழியில் என்ஜின் கட்டி அதை வைத்து தான் போட் ஓட்டுவார்கள்.அதை வாங்கி பிடித்து பார்த்தேன் .என்னமாய் அதிருகிறது தெரியுமா ? 

இதை பற்றி என்னுடன் வந்த சிலம்பரசனிடம் நான் சொல்லும் போது ,  அவன் ஒரு கேள்வி கேட்டான் . நானும் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தேன் . கேள்வி இதுதான்,     திடிர் என இந்த என்ஜின் பழுதடைந்தால் என்ன செய்வார்கள் . ?

அப்புறமாக FM மில் ஒரு நல்ல பாட்டு போடவும் எங்களுக்கு அங்கேயே ஒரு சின்ன டான்ஸ் போட வேண்டும் போல இருந்தது . மனசு ஒரு விஷயத்துக்கு ஆசை பட்டா அதை செஞ்சிடனும் .ஏன்னா , மனசு ஒரு நாய்க்குட்டி மாதிரி,  ரொம்ப கட்டி போட்டே வைச்சிருந்தா வெறி பிடிச்சிடும் .( ரொம்ப அவுத்து விட்டா  தெரு நாயா ஆகிடும் ங்கறது வேற விஷயம் ) . கடல் அலை கால்களை நனைக்க,நானும் சிலம்புவும்  ஒரு சின்ன ஆட்டம் போட்டு விட்டு கிளம்பினோம் . 


Thursday, April 5, 2012

தமிழா, நாளை உன் நாளே , இன்று ?

உளவியலில் ஒரு தத்துவம் ஒன்று உள்ளது ,ஒரு மனித மனம் பெண்டுலம் கடிகாரம் போன்றது. அதாவது ஒரு திசையில் பயணித்தால் அதற்கு எதிர் திசையில் பயணித்தே தீரும் .ஒரு விதமாக வாழும் மனிதன் அப்படியே அதற்கு நேர் எதிராக மாறுவதை நாம் வாழ்வில் கண்டிருப்போம் .நீங்கள் '' சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமீ " படத்தை பார்த்திருக்கீறீர்களா ?, எந்நேரமும் தண்ணி அடித்துக்கொண்டிருக்கும் தங்கர் பச்சான் , சபரி மலைக்கு சென்று வந்தவுடன் , குடும்பத்தையே கூட கவனிக்காமல் முழு நேரமும் பூஜை ,புனஸ்காரம் என சாமியார் போல ஆகிவிடுவார் .

அநியாயத்திற்கு நல்லவனாக இருப்பவர்கள் படு கெட்டவனாகவும் ,கேடு
கெட்டவர்கள் தீடீர் என்று பயங்கர நல்லவர்களாகவும் மாறிவீடுவார்கள். ஒரு விசியத்தில் நாம் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தோமோ ,அதே அளவிற்கு நாம் விலகும் சூழ்நிலையும் நம் வாழ்வில் சந்திந்திருப்போம்.
இதை விளக்க சு.கி. சிவம் ஒரு கதை சொல்வார் .
ஒரு ஊரில் ஒரு மோசமான,பணக்கார , பெண் பித்தன் இருந்தானாம் .எந்த அளவிற்கு என்றால் அவன் படி ஏறும் பொது கூட பெண்களை நிற்க வைத்து அவர்களின் தோளில் கை வைத்து ஏறி செல்வனாம் . அந்த அளவிற்கு பெண் பித்தன் . தீடீர் என்று ஒரு நாள் மனம் திருந்தி ஒரு சாமியாரிடம் போய் (இப்போதெல்லாம் சாமியார்கள்தான் அப்படி பெண் பித்தர்களாக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம் ),''நான் உலக இன்பங்களை வெறுத்து விட்டேன் ,என்னை உங்கள் சீடராக
சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்றானாம் .  அந்த சாமியாரின் உடன் இருந்த அவரது சீடர்கள் அவனை சேர்த்துக்கொள்ள வேண்டாம் ,அவனால் திருந்தவே முடியாது ,அவனால் பெண் வாசம் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறினார்கள் . சிறிது நேரம் யோசித்த சாமியார் அவனை சீடனாக சேர்த்துக்கொண்டார் . சிறிது நாட்களுக்கு பிறகு அவன் ஊரே மெச்சும் அளவிற்கு துறவர வாழ்வில் சிறந்து விளங்கினனாம் . அதாவது எந்த அளவிற்கு உலக இன்பங்களில் ஈடுபாட்டுடன் இருந்தானோ அந்த அளவிற்கு விலகி ஓடி இருக்கிறான் .ஒன்று இந்த end ,
இல்லை அந்த end , இதுதான் BENDULAM CONCEPT .

ஆனால் நான் யோசிப்பதெல்லாம் ,இந்த பெண்டுலம் கான்செப்ட் , வெகு ஜன உளவியலுக்கும் பொருந்துமோ ? என்பதுதான் .என்னுடைய கேள்வி எல்லாம் எப்படி இந்த தமிழ் இனம் தடு மாறி,தடம் மாறி போனது ? எந்த அளவிற்கு தன்மானத்துடன் வாழ்ந்தோமோ ,அந்த அளவிற்கு இன்று கேவலப்பட்டு நிற்கிறோம் .

நமக்கு அருகில் தமிழ் ஈழம் அழிந்த போது , அதை மறக்க நமக்கு IPL CRICKET போதுமானதாக இருந்தது .நம் அழிவிற்கு நாமே உலக மாநாடு வேறு நடத்தினோம் .இன்னும் பல வருடங்கள் கழித்து நமது பிள்ளையோ ,பேரனோ, வரலாற்றில் ஈழ தமிழ் மக்களின் அழிவை படித்து விட்டு ,அந்த இனப் படுகொலைகள் நீங்கள் வாழ்ந்த காலத்தில் தானே நடந்தது அப்போது  என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? என்று நம்மை பார்த்து கேட்கும் போது நாம் என்ன செய்ய போகிறோம் ?
அது வெளி நாட்டு பிரச்சனை ,நாம் என்ன செய்ய முடியும் ? என்று கேட்கும் படித்த அறிஞர்களே ,அதை விடுங்கள், நமது மீனவர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதை எதை பேசி நியாப்படுத்த போகிறீர்கள். மூன்று கேரளத்தவர்களை சுட்ட இத்தாலியர்கள் இன்னும் சிறையில் , அந்த கப்பலை மூன்று கோடி பிணையில் விடுவித்திருக்கிறார்கள். இத்தாலி இலங்கையைவிட பல மடங்கு வல்லரசு . மும்பை தாக்குதலின் போது நமக்கு உதவுவதாக அறிவித்த நாடு . கேரளதவர்களுக்காக இத்தாலியையே கேள்வி கேட்கும் இந்திய அரசு , தமிழர்களுக்காக இலங்கையை பகைத்து கொள்ளாது. ஏன் , கேவலம் தமிழன்தானே ,.

ஆஸ்ரேலியா வில் ஒரு சிங் துறவி தாக்கப்பட்ட போது ,  ஒன்றரை கோடி மக்கள் தொகை உள்ள சிங் இனத்தவர்களுக்காக அவ்வளவு பெரிய வல்லரசான ஆஸ்ரேலியா வையே கேள்வி கேட்கும் நமது மாண்புமிகு மன்மோகன் ,ஏழு கோடி தமிழர்களுக்கு மதிப்பளித்து இந்த துக்கடா நாடான இலங்கையை எதுவும் கேட்க மாட்டார் .அது சரி .போரை நடத்தியதே இவர்கள் தானே .


இப்போது கூட ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா ஆதரவு தந்த விசயத்தில் , இந்தியா மதிப்பளித்தது தமிழர்களின் உணர்வுக்கா இல்லை அமெரிக்காவின் உணர்வுக்கா ?

கூடங்குளம் அணு உலையை கண்டு அருகில் உள்ள இலங்கை பயப்படுகிறது .பேரழிவு இடர் மீட்பு ஒப்பந்த்ததிற்காக இந்தியாவை அழைக்கிறது .ஆனால் நமக்கு பயமில்லை .பயப்படவும் கூடாது . உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல கோடி போட்டு செய்த விசியத்தை கை விட முடியுமா ? என்கிறார்கள் . ஏனோ இந்த நேரத்தில் எனக்கு சேது சமுத்திர திட்டம் நினைவிற்கு வந்து தொலைக்கிறது .


 உருவாகும் மின்சாரத்தில் நமக்கு சரியான பங்கு வேண்டுமென்று கேட்டுள்ளார் நமது முதல்வர் .இதுவும் கட்சத் தீவு மீட்பு மாதிரி தான் நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான். தருவதாக இருந்தால் நமக்கு நெய்வேலி மின்சாரமே போதுமே. நெய்வேலியில் உருவாகும்  மின்சாரத்தில் 15 % மட்டுமே நமக்கு தரப்படுகிறது .நெய்வேலி அனல் மின் நிலையத்திற்காக நாம் இழந்தது அதிகம் .கடலூர் மாவட்டத்தில் நிலத்திடி நீர் இறங்கி போனதற்கு அதுவே காரணம் .அதாவது நமது வளத்தை சுரண்டி கர்நாடகமும் ,பீகாரும் மின்வெட்டு இல்லா மாநிலமாக திகழ்கிறது (வெள்ளைக் கார அரசாங்கம் நினைவுக்கு வருகிறதா ?) .கூடங்குளமும் அப்படித்தான் , சிம்பிள் ஆ சொல்லணுமுன்னா    ரிஸ்க் நமக்கு  ,   ரஸ்க் அவங்களுக்கு ,.....
இதெல்லாம் விட ஒரு பெரிய விசியம் ,பாகிஸ்தான் க்கு 5000 மெகா வாட் மின்சாரத்தை தர முடிவு செய்துள்ளது நமது பெருந்தன்மையான மத்திய அரசு .அது எப்படி அய்யா உங்களுக்கு எங்களை விட பாகிஸ்தான் காரன் மேல அவ்வளவு பாசம் ?


சமிப கால வரலாற்றில் கூட ,ஒரு மொழி உள்ளே வரகூடாது என்பதற்காக கூட மிகப் பெரிய அளவில் போராடியிருக்கிறோம் .எங்க போனது நமது சொரணை ( வீரம் என்பதெல்லாம் இப்போது நமக்கு பெரிய வார்த்தை) .
என்ன காரணம் ? 


அசோகரைப் பற்றியும் பாபரை பற்றியும் பக்கம் பக்கமாகசொல்லித்தந்த நமது பாடபுத்தகங்கள்,சேர, சோழ, பாண்டிய, தொண்டைமான், பல்லவர்கள் பற்றியெல்லாம் திட்டமிட்டு மறைத்து விட்டனவே ,அதனாலா?


தமிழர்களை உணர்வுபூர்வமாக வழிநடத்திய திராவிட இயக்கங்கள்,பின்னால் வந்த 
தலைவர்களால் அதன் நோக்கமே சிதைந்து போனதை பார்த்து தமிழன் சோர்வடைந்து விட்டானா ? தமிழ் உணர்வு என்றெல்லாம் பேசிவிட்டு கடைசியில் சொந்த லாபங்களுக்காக பால் மாறிவிடும் தலைவர்களால் நொந்து போய்விட்டானா ?

சரி .தமிழனை விடுவோம் . "தமிழன் இனி மெல்ல சாகுவான்" . 

ஆனால் ஒன்று, இந்த வெகு ஜன பெண்டுலம் மீண்டும் எதிர் திசையில் திரும்பும், தமிழன் மீண்டும் பழைய வீரத்துடன் வருவான். அதுதான் விதி. அதனால் நாங்கள் அலட்சியமாக இருக்கிறோம் என்று நீங்களும் அலட்சியமாக இருக்காதீர்கள் இந்திய அரசே, வல்லபாய் படேலின் உழைப்பும் கனவும் வீணாகி விட போகிறது .

Tuesday, April 3, 2012

என் மரியதைக்குரிவளே !

                                                        photography : asuvathaman 
நாலே நாலு தலை ,
படைப்பது தான் வேலை ,
முன்று கடவுளுள் ஒருவன் ,
கருடனாய்க் கூட பிறந்தவன் ,

அவ்வளவு தான் தெரியும் எனக்கு ,
அன்று வரை பிரம்மன் பற்றி ,
அவளைக் கண்ட பின்தான் கண்டு கொண்டேன் ,
அவனுக்கு கவிதை எழுத தெரியும் என்று ! ! ! 

புகை படம்

முன் குறிப்பு : புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடானது .

விவேகானந்தருக்கு புகைப் பழக்கம் உள்ளதென்று நான்  சொல்லும்போதெல்லாம்  நண்பர்கள் யாரும் நம்புவதில்லை .''எனது சிந்தனைகள் '' என்ற புத்தகத்தில், சின்ன வயதில் இந்த விஷியத்தை படிக்கும் போது எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது .'உலகில் எல்லா இன்பங்களையும் நான் துறந்த பிறகு இந்த புகை இலை பயன்படுத்தும் பழக்கம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல ' என்கிறார் விவேகனந்தர் .

ஒருநாள் மயிலாப்பூரில் auditor  ஒருவரை சந்தித்த்தேன் .அனேகமாக 86 லிருந்து 90 வயது இருக்கும் . ஆனால் நல்ல திறமை மற்றும் ஞாபக சக்தி ,சென்னை யில் உள்ள பல  auditor  கள் அவரிடம் கொடுத்து auditing செய்து கொள்கிறார்கள் . நான் அவரை சந்தித்தது கூட அப்படியான ஒரு தருணத்தில் தான். எனது  auditor  அவசர வேலை யாக டெல்லி சென்றிருந்ததால் அவரிடம் சென்று ரிப்போர்ட் டை வாங்கிக் கொள்ள சொன்னார் . அவரிடம் கொடுத்து தான் எனது  auditor  இத்தனை நாட்களாக செய்கிறார் என்று எனக்கு அன்று தான் தெரிந்தது . ஒல்லியான ஆனால் வசீகரமான கிழவர் அவர் . கிங்க்ஸ் சிகரட் புகைத்து கொண்டிருந்தார் .அவர் பிடிக்கும் தோரணையிலேயே தெரிந்தது,  அப்துல் கலாமே அவர் அலுவகத்துக்கு வந்தாலும் அவர் புகை பிடித்துக்கொண்டே தான் பேசுவார் போல .சிகரட்டை ash tray வில் வைத்து நசுக்கிய அடுத்த நிமிடம் அவர் செய்யும் அடுத்த வேலை lighter எடுப்பது தான் .அப்படி ஒரு செயின் ஸ்மோக்கர் ! . ஆனால் எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் , எப்படி இவர் இத்தனை வயது வரை ஆரோக்கியமாக  இருக்கிறார் என்று . உளுந்தூர்பேட்டை யில் பழனி வேல் வாத்தியாரை பார்க்கும் போதும் எனக்கு இதே போல ஆச்சர்யம் ஏற்பட்டது உண்டு , அவரை முதலில் 2nd std படிக்கும் போது பார்த்த்தேன் . full மப்பில் பரிதாபமான நிலையில் இருந்தார் .அவரை அன்று பார்க்கும் போது இன்னும் ரெண்டு மாதங்களில் போய் சேர்ந்து விடுவார் என்று நினைத்தேன் . சமிபத்தில் கூட அவரை சந்தித்தேன் , இன்னும் அதே மப்பு வாசனையுடன் அதே போலவே இருக்கிறார் ! 

சட்ட கல்லூரியில் படிக்கும் காலத்தில் , business விஷியமாக ஒருநாள் true  பிஸ்கட் கம்பெனி யின் தலைவரை சந்தித்தேன் . அவரும் தனித்துவமான personality  தான் .அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் . அவரது அலுவலகமே நன்றாக பராமரிக்கப் பட்டிருந்தது .அவரும் நம்ம  auditor  போலவே தான் .முன்றில் ஒரு பங்கு வெட்டுபட்டிறுந்த அவரது ஆள் கட்டி விரலுக்கும் ,நடு விரலுக்கும் நடுவே பில்ட்டர் சிகரட் புகைந்து கொண்டே இருந்தது .மிகவும் ஸ்டைல் ஆக இருந்தார் .அவரது இங்கிலீஷ் , நடவடிக்கைகள் அனைத்துமே ஒரு அலட்சியமான ஆனால் அழகியலுடன் இருந்தது . அவரது attitude க்கு அவரது சிகரட்டும் அழகு சேர்த்தது .

புகை பழக்கம் உள்ள ஆளுமைகளில் (personality) , நான் சந்தித்த இந்த இரு நபர்களையும்  என்னால் மறக்க முடியாது .இப்படியாக ரஜனி காநத மட்டுமல்ல , நம் வாழ்வு முழுதும் புகை பிடிக்கும் ஆளுமைகள் வந்து போகின்றன ,நினைவில் நிற்கின்றன .எனக்கு காலில் surgery  செய்த  டாக்டரிடம் கூட சிகரட் நாற்றம் மணப்பதை  உணர்தேன். ஆபரேஷன் நடக்கும் போது நான் அதிகமாக யோசித்தது இதைத்தான் , புகை பழக்கத்தினால் வரும்  கேடுகள்  பற்றி  நம்மை விட டாக்டர் களுக்கு நன்றாக தெரியுமே , பின்பு எப்படி புகைக்கிறார்கள் .

இங்கு புகைப் பழக்கம் நல்லதா ? கெட்டதா? என்றெல்லாம் நான் பேச வரவில்லை . ஜஸ்ட் இவர்களை பற்றி சொல்கிறேன் அவ்வளவுதான் .